Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

70 வீதம் வேண்டும் – பசில்: நிராகரித்த ரணில் – திங்கட்கிழமை வேட்பாளர் அறிவிப்பு

.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் இருவரும் இந்த சந்திப்பில் கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளித்தால் உள்ளூராட்சி தேர்தலில் 30 வீதமும், மாகாண சபை தேர்தலில் 35 வீதமும், நாடாளுமன்ற தேர்தலில் 40 வீதமும் போட்டியிடுவதற்கான ஒதுக்கீடுகளை செய்வதாக ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியுள்ளார்.ஆனால், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 90 வீதமும், நாடாளுமன்றத் தேர்தலில் 70 வீதமும், மாகாண சபை தேர்தலில் 70 வீதமும் பசில் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்படி, இந்த கலந்துரையாடல் எவ்வித தீர்வும் நேற்று முடிவடைந்துள்ளதோடு, ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் பொதுஜன பெரமுன அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.