Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தொடர்ந்தும் சர்வதேச கண்காணிப்பு வளையத்திற்குள் இலங்கை; விடுக்கப்பட்டுள்ள வலியறுத்தல்

.

இலங்கையைத் தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கும் வகையிலான பிரேரணை ஒன்றை நிறைவேற்றுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை, சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அதன் ஆசியப் பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாக்சி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் தெரித்துள்ளார்.

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.

அவர் கடந்தகால ஜனாதிபதிகள் புரிந்த தவறுகளைச் சரி செய்ய வேண்டும்.

இலங்கையில், தண்டனைகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியாளர்களும் அச்சுறுத்தப்படுதல், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படுதல் போன்ற நிலைமைகள் இன்னும் தொடர்கின்றன.

இந்த நிலையில் இலங்கையை எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குச் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்துக் கொள்வதற்கான பிரேரணை கட்டாயமாகும்.

இந்த பிரேரணை, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளைக் கண்காணித்து சர்வதேசம் அறிக்கைப்படுத்தும் வகையிலும், எதிர்கால வழக்கீடு நடவடிக்கைகளுக்காக ஆதாரங்களைத் திரட்டவும் இயலும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

அதன் ஊடாக, சர்வதேச குற்றங்களை இழைத்தவர்களுக்கு என்றாவது ஒருநாள் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.