Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

50 வீதவாக்குகள் எவருக்கும் கிடைக்காது; 53 இலட்சம் வாக்குகளே கிடைக்கும்

.

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லையெனவும் அதிக வாக்குகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளர் குறைந்தது 53 இலட்சம் வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதான வேட்பாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கே இம்முறை 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வாக்குகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளர் ஒருவர் குறைந்தது 40 – 45 இலட்ச வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் அதிகபட்சமாக 53 இலட்சம் வரை செல்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது அதிகபட்ச வாக்குகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளர் 35 – 40 இலட்சம் வரையான வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் மூன்றாவது மற்றும் நான்காவது வேட்பாளர்கள் குறைந்தது 20 இலட்சம் வாக்குகளை பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமைகளால் பிரதான வேட்பாளர்களாக அடையாளம் காணப்பட்ட எவராலும் 50 வீதத்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளதாக அரசியல் மட்டத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.