Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அமெரிக்காவின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஹுதிகள்

,

அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமான எம்.கியூ-9 ட்ரோனை நேற்று சுட்டு வீழ்த்தியதாக யெமனின் ஹுதி கிளர்ச்சிக்குழுவின் ​பேச்சாளர் யஹ்யா சரய் தெரிவித்தார்.

ஹுதி கிளர்ச்சிக் குழுவுக்கு எதிராக அமெரிக்கா வான் வழித் தாக்குதல்களை முன்னெடுத்துவரும் சூழலில் இந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

காசா மீதான யுத்தத்தை நிறுத்துமாறு கோரி இஸ்ரேல் மீதும் செங்கடல் வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்கள் மீதும் கடந்த 2023 ஒக்டோபர் முதல் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றோம். 

அதற்கு எதிராக 2024 ஜனவரி முதல் யெமன் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் விமானத்தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. அதிலும் கடந்த மார்ச் 15 ஆம் திகதி முதல் யெமனின் பல மாகாணங்கள் மீது தொடராக தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாமும் பதில் தாக்குதல்களை முன்னெடுக்கின்றோம். அந்த வகையில் கடந்த பத்து நாட்களுக்குள் மூன்றாவது ட்ரோனை உள்ளுரில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையைப் பயன்படுத்தி நேற்று சுட்டு வீழ்த்தியுள்ளோம்.

ஆனால் காசா யுத்தத்திற்கு எதிராக நாம் ஆரம்பித்த தாக்குதல் நடவடிக்கையின் கீழ் வீழ்த்தப்பட்டுள்ள 18 வது ட்ரோன் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆளிலில்லா விமானம் ஒன்றின் பெறுமதி சுமார் 32 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள அதேநேரம் கடந்த மார்ச் 15 ஆம் திகதி முதல் ஹுதிக்கள் மீது முன்னெடுக்கப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு ஒரு பில்லியன் டொலர் செலவு அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.