Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எழுதுவினைஞரை முத்தமிட்ட மனிதவள முகாமையாளர்: 750,000 ரூபாய் நட்டஈடு, 7 வருட கடூழியச் சிறை – நீதிமன்றம் தீர்ப்பு

.

 

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த எழுதுவினைஞர் ஒருவரை முத்தமிட்ட குற்றத்திற்காக மனிதவள முகைமைாளர் ஒருவர் மீது மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணையின் பின் 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனிதவள முகாமையாளர் திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, குறித்த நபரால் பாதிக்கப்பட்ட எழுதுவினைஞக்கு 750,000 ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மேல்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இழப்பீடு வழங்க தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட சிறைதண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விசாரணையின் பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தார்.

அதன்போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.