Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகம் அவர்களின் வித்துடலானது பிரான்சில் விதைக்கப்பட்டது.

விநாயகம் அவர்களின் புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நேற்றைய தினம் (20.06.2024‌) வியாழக்கிழமை, பிரான்சில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகம் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு  மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், முதுநிலைப் போராளியுமாகிய விநாயகம் - கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி  அவர்கள் கடந்த 04.06.2024 செவ்வாய்க்கிழமை அன்று உடல் நலக்குறைவு காரணமாக பிரான்சு தேசத்தில் சாவடைந்தார்.

தமிழீழ தேச மக்களின் மனதில் இடம் பிடித்து நிலைத்துவிட்ட இவருக்கு பெரும் திரளான  மக்கள் நீண்ட வரிசையில் நின்று இறுதி வணக்கம் செலுத்தினர். காலை 10.00 மணிமுதல் பகல் 15.00 மணிவரை Espace Venise 30 Rte de Groslay 95200 Sarcelles என்னும் முகவரியில் இவரின் புகழுடலுக்கு  இறுதி வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து உறவினர்கள், விடுதலைப்புலிகளின் பல கட்டமைப்புகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன் தமது இரங்கல் செய்திகளையும் தெரிவித்திருந்தனர்.

விநாயகம் அவர்களின் புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்ட பின்னர், மாலை 17.00 மணியளவில் வித்துடலானது Cimetiére Parisien de Pantin 164 Av. Jean jaurés 93500 Pantin என்னும் முகவரியில்  விதைக்கப்பட்டது.