Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜேவிபி கூட்டத்தை உளவு பார்க்க வந்த நபர்கள்: பொலிஸார் தீவிர விசாரணை

.

 

ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுப்பெற்ற பொலிஸார் பிலியந்தலையில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துக்கொண்ட இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் கண்டுபிடிக்க பிலியந்தலை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ‘திவயின சிங்கள நாளிதழ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் போலியானது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கடந்த முதலாம் திகதி பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடலொன்று கடந்த 30ஆம் திகதி முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் இடம்பெற்றது.

கலந்துரையாடல் இடம்பெற்ற இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இனந்தெரியாத இருவர் நீண்ட நேரமாக நடமாடி வந்துள்ளனர்.

இவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த ஓய்வு பெற்ற பொலிஸார் அவர்களை சோதனை செய்ய முயன்ற போது தப்பி ஓடியுள்ளனர்.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் தாக்குதல் நடத்தும் நோக்கில் அல்லது உளவு பார்க்கும் நோக்கில் இந்த இடத்திற்கு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.