Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் யார்?: வவுனியாவில் இன்று முடிவு

.

ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன், அரியநேத்திரன், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இடம்பெற்றுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல சுற்று கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் ஏழு சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து “தமிழ் மக்கள் பொதுச் சபையை” ஏற்படுத்தியிருந்தன.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜூலை 22ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் கையெழுத்திட்டன.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அதில் சந்திரநேரு சந்திரகாந்தன், தவராசா, அரியநேத்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, அரசியல் கட்சிகள் சாராதவராகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாகவும் வேட்பாளர் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேடல்கள் இடம்பெற்றன.

பின்னர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் சார்பற்ற ஆணாக இருந்தாலும் போதுமானது என்ற அடிப்படையில் தேடப்பட்டபோதும் பொருத்தமானவர்களை அடையாளம் காண முடிந்திருக்கவில்லை.

அதனையடுத்து வடக்கில் இருந்து அரசியல் சாராத ஒருவரை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டபோதும் அதுவும் பலனளிக்கவில்லை.

அதனையடுத்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்பினர் பிரதிநிதிகளைக் கோரியபோதும் அவர்களும் பின்னடித்தனர்.

இதற்கிடையில் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் கட்சி மற்றும் சின்னம் சம்பந்தமாகவும் இணக்கப்பாடற்ற நிலைமைகள் உருவெடுத்தன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை களமிறக்குவதாக இருந்தால் கட்சிகளில் தங்கியிருக்கத் தேவையில்லை என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில் மேற்படி நபர்களின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் குறித்து வவுனியாவில் இன்று கூடி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.