Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க நோர்வே முடிவு.

நோர்வே அரசியல் மற்றும் ஊடகங்கள் மட்டத்தில் பேசுபோருளாக இருந்து வந்தது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளிவந்துள்ளது.

பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க நோர்வே முடிவு.
பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க நோர்வே முடிவு செய்துள்ளது. இது விடயம் கடந்த பல மாதங்களாக நோர்வே அரசியல் மற்றும் ஊடகங்கள் மட்டத்தில் பேசுபோருளாக இருந்து வந்தது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளிவந்துள்ளது.இதற்கு நோர்வே நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவு முன்னேரே கிடைத்திருந்தது. அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகியனவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவுள்ளன. இஸ்ரேல் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நோர்வேக்கான இஸ்ரேல் தூதரை நாட்டுக்கு அழைத்துள்ளது. பாலஸ்தீனத்திற்கான உதவி வழங்கும் நாடுகளின் குழுவில் நோர்வேயின் பங்கு சார்ந்து எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என நோர்வேயை இஸ்ரேல் எச்சரித்துள்ளது.அண்மைய வாரங்களில் ஸ்பெயின் அயர்லாண்ட், நோர்வே ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உரையாடலின் பின்னரே இந்த முடிவு வெளிவந்துள்ளது. நீண்ட காலமாக மூன்று நாடுகளுக்கும் இடையே விரிவான இராஜதந்திர மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. மேலும் ஸ்பெயின் இது விடயத்தில் உந்து சக்தியாக இருந்துள்ளது காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை எல்லை மீறியுள்ள நிலையில் இந்த அறிவிப்பிற்கும் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் மீது கைது ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் முக்கியத்துவம் உள்ளது.