இலங்கையில் தொடர்ந்தும் குறைந்துவரும் பிறப்பு எண்ணிக்கை.
.

அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமானளவு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், முதியோர் சமூகம் அதிகரிப்பதன் மூலமும், இளம் சமூகம் குறைவதன் மூலமும் நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு இந்த நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து இருபத்தைந்தாயிரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு 2 இலட்சத்து 47 ஆயிர்மாக குறைவடைந்துள்ளது.
இதேநேரம் 2017 ஆம் ஆண்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 ஆயிரமாக காணப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கடந்த 5 வருடங்களாக மகளீர் மற்றும் மகப்பேறியல் வைத்தியர்களினால் நடத்தப்பட்ட ஆய்வின்மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது, எதிர்காலத்தில் நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும், இதன் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் மகளிர் மற்றும் மகப்பமற்று வைத்தியர் சனத் லனரோல் தெரிவித்துள்ளார்.