Breaking News
ஏமாற்று அரசியலை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் - டேவிட்
.

தேசிய மக்கள் சக்தி சார்பிலே யாழ். மாவட்டத்திலிருந்து வைத்தியர், அதிபர் ஆகியோர் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு அமைச்சுப் பதவியோ, பிரதி அமைச்சுப் பதவியோ கொடுக்காது,தேசிய பட்டியல் ஊடாக வந்த ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்குகிறார்கள்.
இவர்களுடைய ஏமாற்று அரசியலை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முதன்மை அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
வெள்ள நிவாரணத்தை அரசாங்கம் உரியமுறையில் மேற்கொள்ளவில்லை.
ஹெலிகாப்டர் பயணங்களை பயன்படுத்த மாட்டோம் என கூறியவர்களின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெலிகாப்டரில் யாழ்ப்பாணம் வருகிறார்.