நாம் எதிரிகள் அல்ல, நண்பர்கள். என்ன பிரச்சனை என்று தெரியாமல் ஏதேதோ பேசி விட்டேன்!
தமிழில் இருந்து கன்னடம் பிறந்த கதையைச் சொன்னார்கள். கன்னடம் தமிழின் சகோதர மொழி இல்லை. தமிழின் சேய்மொழி

நாம் எதிரிகள் அல்ல, நண்பர்கள். என்ன பிரச்சனை என்று தெரியாமல் ஏதேதோ பேசி விட்டேன். கன்னட ஆய்வறிஞர்கள்.தொடர்பு கொண்டார்கள். தமிழில் இருந்து கன்னடம் பிறந்த கதையைச் சொன்னார்கள். கன்னடம் தமிழின் சகோதர மொழி இல்லை. தமிழின் சேய்மொழி என்றார்கள். தமிழ் தாய், கன்னடம் அவள் பெற்றெடுத்த சேய் என்றார்கள். கன்னடர்கள் ஆகிய நாமே ஒரு காலத்தில் தமிழர்களாக இருந்தோம். வடமொழி கலப்பால் திரிந்து கன்னடர்கள் ஆனோம் என்றார்கள். இன்னும் கன்னட வணிகர்கள் தொடர்பு கொண்டார்கள். பார்த்து பேசு ஐயா, தமிழர்கள் முன்பு போல கிடையாது. நம்மை விட வணிகத்தில் உச்சம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அவர்களோடு நமக்கு வணிகத் தொடர்பு வேண்டி இருக்கிறது. அவர்களை பகைத்துக் கொண்டால், நாங்கள் கட்டிய துணியோடு கர்நாடகா திரும்ப வேண்டியதுதான். வாயைப் பொத்திக் கொண்டிரு என்று சொன்னார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான கன்னடர்கள் தொடர்பு கொண்டார்கள். கர்நாடகாவில் மட்டும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா, தமிழ்நாட்டிலும் கன்னடர்களும் வாழ்கிறார்கள் என்று நினைப்பு உங்களுக்கு இருக்கட்டும். இங்கு நாங்கள் முப்பது லட்சம் பேர் வாழ்கிறோம். அதுவும் வசதி வாய்ப்புகளோடு வாழ்கிறோம். கர்நாடகத்தில் கர்நாடகர்களை நீங்கள் வாழவைத்துக் கொண்டிருக்கிற யோகியதையை விட இங்கு தமிழ்நாட்டில் நாங்கள் சிறப்பாக வாழ்கிறோம். எங்களுக்கு செருப்படி வாங்கி கொடுத்து விடாதே. ஒரு சினிமாக்காரன் மேடையில் ஒரு சினிமாக்காரன் பேச்சு தானே. மூடிக்கொண்டு சும்மா இரு என்றார்கள். ஆகவே நாம் நண்பர்கள். நன்றாக வேலை செய்து ஒன்றாக முன்னேறுவோம். பிரச்சனையை இத்தோடு முடித்துக் கொள்வோம்.