அண்ணா பல்கலை வன்கொடுமை: ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!!
கணம் நீதிபதி நீதிபதி ராஜலட்சுமி அவர்களே! யாரு அச்த சாரு? எனன தண்டனை அவருக்கு?

தனக்கு தந்தை இல்லை எனவும், பெண் குழந்தைகள் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு ஞானசேகரன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி அண்ணா பல்லைக்கழக வளாகத்தில் மாணவியை மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடினார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்கள் ஆகியவற்றை கொண்டு நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், சம்பவம் நடந்த தினத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் தொடர்ச்சியாக, ஞானசேகரனை பிடித்த போலீசார் சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையை தொடர்ந்து, போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம், ஞானசேகரனின் புகைப்படத்தை காட்டி அவர் பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதி செய்தனர். இதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 26 ஆம் தேதி ஞானசேகரனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
கடந்த 5 மாதமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் மே 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஞானசேகரனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி ராஜலட்சுமி, ஜூன் 2 ம் தேதி தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அப்போது ஞானசேகரன் தரப்பில், தனக்கு தந்தை இல்லை எனவும், பெண் குழந்தைகள் இருப்பதால் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை தண்டனை விவரத்தை வாசித்தி நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 90 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.இதில், அதிகபட்ச தண்டனையான 30 ஆண்டுகளை குற்றவாளி ஞானசேகரன் தனது ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்தார்.