கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!
பட்டம் பெற்ற பட்டதாரிகள் பட்டமரமாய் வீதியிலே

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பக்க குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தின் போது,
பட்டம் முடித்து பல வருடங்களாகியும் இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமையினால் தாம் வேலையில்லாமல் காணப்படுவதாகவும், இது குடும்பத்திற்கு பெரும் சுமையாக இருப்பதாகவும் வேலையில்லா பட்டதாரிகள் தெரிவித்தனர்.
ஏனைய மாகாணங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் புறக்கணிக்கப்படாமல் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் சுழற்சி முறையிலான போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.