ரஷ்யா - 50 பேருடன் சென்ற An-24 பயணிகள் விமானம் தொடர்பை இழந்துள்ள நிலையில், தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
An-24 விமானம், டின்டா என்ற நகரத்தை நெருங்கும் போது ரேடார் திரைகளில் இருந்து தவறி விழுந்துள்ளது!

ரஷ்யாவின் தூர கிழக்கில் சுமார் 50 பேருடன் சென்ற An-24 பயணிகள் விமானத்துடனான தொடர்பை இன்று (24) விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இழந்துள்ள நிலையில், தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
50 பேருடன் பயணித்த ரஷ்ய பயணிகள் விமானம் நாட்டின் கிழக்குப் பகுதியில் விபத்துக்குள்ளானது, முதற்கட்ட தரவுகளின்படி யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சைபீரியாவை தளமாகக் கொண்ட அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் An-24 விமானம், சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா என்ற நகரத்தை நெருங்கும் போது ரேடார் திரைகளில் இருந்து தவறி விழுந்ததாக அந்நாட்டு அவசரகால அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது.
இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை நெருங்கும் வேளையில், விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
மேலும் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதால் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் உறுதியானதும், ரஷ்யாவின் அவசரநிலை சேவைத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், Mi-8 ரக ஹெலிகொப்டர் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கிய விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமானம், அங்காரா எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த ஆன்டோநோவ் அவ் 24 வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.