200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருங் கல்லினால் செதுக்கப்பட்ட கருமாரியம்மன் சிலை மாயம்.
அடுத்த வாரம் அங்கொரு புத்தர் வீற்றிருப்பார்! 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு என்று பிக்குவும் கூறுவார் இதுதான் சிங்களம்!!

சாமி மலை நூத்தி தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருங் கல்லினால் செதுக்கப்பட்ட கருமாரியம்மன் சிலை மாயம்.
இச் சம்பவம் நேற்று 9 ம் திகதி இரவு இடம் பெற்று உள்ளது என அத் தோட்டத்தில் உள்ள ஆலய பரிபாலன சபை தலைவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் எமது மூதாதையர் எமது பிரிவில் உள்ள ஆலயத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் மூன்றரை அடி உயரம் கொண்ட கருங்கல்லால் செதுக்கப்பட்ட கருமாரி அம்மன் சிலையை வைத்து வணங்கி வந்தனர்.
அச் சிலைக்கு பதிலாக புதிய சிலை ஒன்று வைக்கப்பட்டு பழமையான சிலையை ஆலய முற்றத்தில் வைத்து வணங்கி வந்தனர்.
அந்த பெறுமதி மிக்க சிலை நேற்று இரவு முதல் காணாமல் போய் உள்ளது என பரிபாலன சபையினர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளனர்.
இது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்
அடுத்த வாரம் அங்கொரு புத்தர் வீற்றிருப்பார்! 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு என்று பிக்குவும் கூறுவார் இதுதான் சிங்களம்!!