2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% சித்திபெற்றுள்ளார்கள்.

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார்.
இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.
இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 சதவீதமாகும்,
மேல் மாகணத்தில் 74.47 சதவீதம், மத்திய மாகணத்தில் 73.91 சதவீதம், தெற்கு மாகணத்தில் 75.64 சதவீதம், வடக்கு மாகணத்தில் 69.86 சதவீதம், கிழக்கு மாகணத்தில் 74.26 சதவீதம், வடமேல் மாகணத்தில் 71.47 சதவீதம், வடமத்திய மாகணத்தில் 70.24 சதவீதம், ஊவா மாகணத்தில் 73.14 சதவீதம் மற்றும் சப்ரகமுவ மாகணத்தில் 73.47 சதவீதம் மாணவர்கள் சித்திபெற்றுள்ளார்கள்.
தமிழ் மொழி மற்றும் இலக்கியம் பாடத்தில் 87.03 சதவீதம், சைவநெறி பாடத்தில் 82.96 சதவீதம், கத்தோலிக்கம் பாடத்தில் 90.22 சதவீதம்,
கிறிஸ்தவம் பாடத்தில் 91.49 சதவீதம், பௌத்தம் பாடத்தில் 83.21 சதவீதம், இஸ்லாம் பாடத்தில் 85.45 சதவீதம், ஆங்கிலம் பாடத்தில் 73.82 சதவீதம், சிங்கள மொழி மற்றும் இலக்கியம் பாடத்தில் 87.73 சதவீதம், வரலாறு பாடத்தில் 82.17 சதவீதம், அறிவியல் பாடத்தில் 71.06 சதவீதம் மற்றும் கணிதம் பாடத்தில் 87.73 சதவீதம் அடிப்படையில் மாணவர்கள் சித்திபெற்றுள்ளார்கள்.
அத்துடன் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34% என தெரிவிக்கப்பட்டுள்ளது.