Breaking News
பூம்புகார் பகுதிக்கு நேரடியாகச் சென்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்திய கருணநாதன் இளங்குமரன்!
,

aho;ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதிக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் நேரடியாகச் சென்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தினார்.
இதன்போது, பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலும் எதிர்காலத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் இளங்குமரன் மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
அந்தவகையில், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், அவை தொடர்பான கோரிக்கை கடிதங்களை தனித்தனியே பெற்றுக் கொண்டதுடன், உரிய தரப்பினருடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
மேலும், அப்பகுதி மக்கள் சந்திப்பில் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சிவக்குமார், சமூக செயற்பாட்டாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.