Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“தெஹிவளை மிருகக்காட்சிசாலையை மூடுங்கள்“: சமூக வலைத்தளங்களில் ஆரம்பிக்கும் புரட்சி

.

 

அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் அரசராங்கம் முன்னெடுத்து வரும் சில திட்டங்களால் இலங்கையில் வளங்கள் பறிபோகின்றன. சில இடங்கள் பராமரிப்பின்றி அழிந்துவருவதையும் கண்கூட பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

அந்தவகையில், கடந்த சில நாட்களாக இலங்கையில் புகழ்பெற்ற மிருகக்காட்சிசாலையான கொழும்பு தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பற்றிய பேச்சுக்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 3 ஆம் திகதியுடன் 88 ஆம் ஆண்டை பூர்த்திசெய்திருந்த நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் மிருகக்காட்சிசாலை பேசுபொருளாக மாறியுள்ளமையும் கவனிக்கத்தக்க விடயமாகும்.

குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் #Nomoredehiwalazoo #ShutdownDehiwelaZoo என்ற ஏஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு ட்ரெண்டாகி வருகின்றது.

பிரபல ஒட்டாரா பௌண்டேசனனின் உரிமையாளர் உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்கள் இது தொடர்பிலான கருத்துக்களுக்கு குரல் எழுப்பி வருகின்றனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.

அங்கு வாழும் மிருகங்கள் தனிமையாக இருப்பதோடு மிகவும் சோர்வாகவும் மனவுளைச்சலுடனும் இருக்கின்றன.

இதற்கு சரியான காரணம் என்ன என்பது தொடர்பில் சரியான விளக்கம் எதுவும் தெஹிவளை மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் இது வரை தெரிவிக்கவில்லை.