Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

“கடினமான நேரத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்.

எந்த நிபந்தனையுமின்றி ஆட்சியை பொறுப்பேற்றிருந்தேன்.

“நரகத்தில் வீழ்ந்த நாட்டை மீட்டேன்”: ஜனாதிபதி நாடாளுமன்றில் விசேட உரை

 

“நரகத்தில் வீழ்ந்த நாட்டை மீட்க முடியும்” என்ற நம்பிக்கை தமக்கு இருந்ததாலேயே ஆட்சியை கைப்பற்றியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வியாக்கிழமை (09) விசேட உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“கடினமான நேரத்தில் பொருளாதாரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். எந்த நிபந்தனையுமின்றி ஆட்சியை பொறுப்பேற்றிருந்தேன்.

அச்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இதன்படி, இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளது. நாட்டின் ​​பணவீக்கம் தற்போது 1.5சதவீதமாக குறைந்துள்ளது.

அத்துடன், கடந்த ஆண்டு வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அந்நிய செலாவணி கையிருப்பு ஐந்து பில்லியன் டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.

சவாலான, கடினமான அத்துடன் சரியான பாதையை பின்பற்றியதன் காரணமாகவே இந்த நிலையை அடைய முடிந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

“நரகத்தில் வீழ்ந்த நாட்டை மீட்க முடியும்” என்ற நம்பிக்கை தமக்கு இருந்ததாலேயே ஆட்சியை கைப்பற்றியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.