Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அனுர தரப்பிலிருந்து சஜித்துக்கு கொலை மிரட்டல்: காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

.

ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஒருவர் மூலம் காலி ஹாலிவல பிரதேசத்தில் வசிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் முறைப்பாடுகளை வழங்கும் நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கடந்த 6ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முறைப்பாடு வழங்கியவர் காலி ஹாலிவலயில் காணப்படும் தனது வீட்டுக் காணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் நன்கொடையாக தேர்தல் காரியாலயம் ஒன்றை திறக்க எதிர்ப்பார்த்துள்ளார்.

அதன்போது காலி பட்டதூவ பிரதேசத்தில் வசிக்கும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவர் தனது மனைவியுடன் வந்து ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலம் ஒன்றை திறந்தால் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தாக முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலி பொலிஸின் தேர்தல் பிரிவுக்கு இந்த முறைப்பாட்டை முன்னிலைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை ஜேவிபி கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அதன் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த பகிரங்கமாக தெரிவித்திருப்பதால், அவரை உடனடியாக குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஆண்டு நிதி நிலை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தகக்து.