Breaking News
தேசிய இளைஞர் விளையாட்டுவிழா கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் யாழ்மாவட்ட இளைஞர் அணிக்கு மூன்றாமிடம்.
.
இன்று நீர்கொழும்பு (Brown Beach) இல் இடம்பெற்ற குறித்த போட்டியில் மிக நீண்ட காலமாக வடமாகாணத்தின் இரு முன்னணி கரப்பந்தாட்ட கழகங்களாக திகழும் ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகத்தின் வீரன் எஸ். தர்சன். ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழகத்தின் வீரன் எஸ். சஞ்சை ஆகிய இளம் ஆளுமைகளின் கூட்டணியில் தேசியத்தில் மூன்றாம் இடம் பெற்றது யாழ்மாவட்ட இளைஞர் அணி.
தொடர்ச்சியாக இரத்னபுரி நுவரெலியா, கிளிநொச்சி மாவட்ட அணிகளை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்தில் கேகாலை மாவட்ட அணியுடன் எதிர்பாராத விதமாக தோல்வியுற்று மீண்டும் மூன்றாம் தெரிவுக்கான போட்டியிலே அம்பலாந்தோட்டை மாவட்ட அணியை வீழ்த்தி தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது யாழ் மாவட்ட இளைஞர் அணி. இந்த இரு இளம் வீரர்களும் தேசிய மட்ட போட்டிகளுக்கு ஏற்கனவே பலவிதமாக பழக்கப்பட்ட இருவர் ஆவர்


