எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்க தமிழ் கட்சிகள் எடுக்கும் முயற்சி என்பது பயனற்றது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது பயனில்லை: டக்ளஸ் தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது பயனில்லை: டக்ளஸ் தெரிவிப்பு.
மன்னார் மாவட்டத்திற்கு இன்றையதினம்(20) விஜயம் செய்த அமைச்சர் டக்ளஜ் தேவானந்தா மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.
இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்கப்படும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்திலும் எமது மக்கள் இனியொருதடவை தோல்வியுற இடமளிக்கக் கூடாது.
தமிழ் பொது வேட்பாளர் விடயம் என்பது பயனற்ற ஒரு விடயம்.
தற்போதைய நிலையில் தென்னிலங்கையில் போட்டியிடும் ஒரு தரப்பினருடன் இணக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடம் ஆதரவு வழங்கி அதனூடாக பேரம் பேசும் சக்தியாக நாம் உருவாக வேண்டும்.
முன்பதாக கடந்தகால தமிழ் அரசியல் தலைவர்களும் போராட்ட அமைப்புகளும் தத்தமது சுயநல தேவைகளுக்காக மற்றவரை தடம் போட்டு வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் இருந்து முன்னெடுத்த பொறிமுறைகள் அனைத்தும் தோல்வியிலேயே கண்டுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த தமிழினமும் சொல்லொணா இன்னல்களையும் எதிர்கொண்டுவிட்டனர்.
ஆனால் எமது நடவடிக்கைகள் தமிழ் மக்கள் தோல்வி காணக்கூடாது என்ற நிலையிலிருந்தே முன்னெடுக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது அதற்கான கள நிலைமைகளை உருவாக்க சாதுரிதமான வழிமுறைகளும் எம்மிடம் உள்ளது.
எனவே அதனை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.