Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

கோட்டாபயவுக்கு என்ன நடந்தது?; மீண்டும் ஒன்றுக்கூடிய ராஜபக்சர்கள்.

.

 

இலங்கை அரசியலில் மன்னராட்சிக்கு பின்னர் பலம்வாய்ந்த குடும்ப அரசியல் நிலவிய காலமாக ராஜபக்சர்களின் ஆட்சிக்காலத்தை குறிப்பிடலாம்.

2005ஆம் ஆண்டுமுதல் 2015ஆம் ஆண்டுவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ராஜபக்சர்களின் ஆதிக்கம் அரசின் அனைத்துத் துறைகளிலும் காணப்பட்டது.

மீண்டும் 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும் அவ்வாறான நிலைமையொன்றே உருவாகியிருந்தது.

ராஜபக்சர்கள் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாக 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சிகளால் அவர்கள் தமது அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் கிளர்ச்சிகள் ஏற்பட்டிருக்காவிடின் இன்றும் ராஜபக்சர்களின் ஆட்சிதான் நிலவும்.

2022ஆம் ஆண்டு நாட்டில் மக்கள் கிளர்ச்சியால் கோட்டாபய ராஜபக்ச தமது ஜனாதிபதி பதவியை துறக்கும் நிலை ஏற்பட்டது. அவரது மோசமான நிர்வாகம் காரணமாகவே நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதுடன், ஏனைய ராஜபக்சர்களும் பதவிகளை துறக்க நேரிட்டது.

இதனால், ராஜபக்சர்கள் குடும்பத்திலும் பாரிய விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக பசில் ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும் பேசிக்கொள்வதில்லை என பல சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில், கடந்த மாதம் 15ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவின் 75 பிறந்த தின கொண்டாடத்தை ராஜபக்சர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடியுள்ளதாக தெரியவருகிறது. அதன் பின்னர் அனைவரும் பல்வேறு சமய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளனர்.

2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் ராஜபக்சர்கள் பொதுவெளியில் ஒன்றாக எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. என்றாலும், தற்போது இவர்களுக்குள் இருந்த கருத்து முரண்பாடுகள் நீங்கியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்சவுடன் கோட்டாபய ராஜபக்சவும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து வருவதாக தெரியவருகிறது.