Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித்!

2021 இல் என்னுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டவேளை தெரிவித்த விடயங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுக்க முடியாது

2021 பெப்ரவரியில் கோட்டாபய என்னுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்க முடியும்.

2021 இல் என்னுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டவேளை தெரிவித்த விடயங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுக்க முடியாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார் என கர்தினால் தெரிவித்துள்ளதை கோட்டாபய மறுதலித்துள்ளார்.

2021ம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி முன்னாள் ஜனாதிபதி என்னுடன் தொலைபேசியில் பேசினார் என்பதை என்னாலும் எனது செயலாளராலும் நிரூபிக்க முடியும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு இஸ்லாமிய குழுக்களை மாத்திரம் தடை செய்யுமாறு பரிந்துரை செய்திருந்தது என கோட்டபாய ராஜபக்ச சமீபத்தில் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

எனினும் அந்த அறிக்கை இஸ்லாமிய அமைப்புகள் இல்லாத ஏனைய சில அமைப்புகளையும் தடை செய்யுமாறு தெளிவாக கேட்டுக்கொண்டது முன்னாள் ஜனாதிபதி உண்மைகளை மறைக்க முடியாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த புலனாய்வு பிரிவு அதிகாரிகளை இடம்மாற்றினார் எனவும் தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் தற்போதைய அரசாங்கம் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டு;ம் என பரிந்துரைத்துள்ள போதிலும் ஏன் அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.