Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அரசாங்கத்தின் முடிவால் பொதுமக்களுக்கு அசௌகரியம்: தொழில்களும் இழப்பு

.

தேர்தல் நிறைவுபெறும் வரை இசைக்கச்சேரிகள் மற்றும் விழாக்களை நடத்த பொலிஸார் அனுமதி வழங்காத காரணத்தினால் நாடளாவிய ரீதியில் இசைக்கச்சேரி ஏற்பாட்டாளர்கள் சுமார் 300 பேர், இந்தத் துறையில் பாடகர்கள் , இசைக் கலைஞர்கள் , மேடை நிர்மாணிப்பவர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட விழாக்கள் மற்றும் இசைக் கச்சேரிகள் நிறுத்தப்பட்டதாக இலங்கை கச்சேரி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டு சங்கத்தின் தலைவர் தினேஷ் அதாவுத தெரிவித்துள்ளார் .

தேர்தல் நடைபெறுவதன் மூலம் பொது மக்களின் ஏனைய செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படக் கூடாது எனவும், கலைத்துறையை தொழிலாகக் கொண்ட தொழில் செய்பவர்களுக்கு இது மிகவும் அநீதியான முடிவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கு இலட்சக்கணக்கான கேளிக்கை வரியை செலுத்தி நாடு முழுவதும் கச்சேரிகள் மற்றும் விழாக்களை தமது குழு நடத்துவதாகவும், அவ்வாறான கச்சேரிகளுக்கு அறவிடப்படும் கேளிக்கை வரியை அரசாங்கம் உடனடியாகக் குறைக்க வேண்டும் எனவும் சங்கத்தின் ஊடகச் செயலாளர் சிதேஷ் ரங்கன விஜேவீர தெரிவித்தார்.