Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜேவிபியின் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது.

.

 

முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனவிரட்ணவும் சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகரவும் ஜேவிபியின் மஹரகம மாநாட்டில் கலந்துகொள்வதை தடுப்பதற்காக அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் கடும் அழுத்தங்களை கொடுத்தனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலின் இரு துருவங்களை சேர்ந்தவர்களும் மிரட்டல்கள் உட்பட பல வழிகளில் அழுத்தங்களை கொடுத்தனர் எனவும் தெரிவித்துள்ள அவர் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போதும் ரவிசெனிவரட்ணவிற்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுகின்றன அரசாங்கம் இந்த தீயநோக்கம் கொண்ட நடவடிக்;கையை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிற்கு தங்கள் விருப்பத்திற்குரிய எந்த கட்சிக்கும் ஆதரவளிப்பதற்கான உரிமையுள்ளது அதற்கு அவர்கள் அரசாங்கத்தினதும் எதிர்கட்சியினதும் ஆதரவை பெறத்தேவையில்லை என குறிப்பிட்டுள்ள ஜேவிபியின் தலைவர் அரசாங்கத்தினதும் எதிர்கட்சியினதும் செயற்பாடுகளை இவர்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதால் இவர்களிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த அழுத்தங்களிற்கு அப்பால் அவர்கள் துணிச்சலாக மக்கள் முன்பேசுவதற்கு முன்வந்துள்ளனர்,அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளதுடன் நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.