Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வல்லரசுகளே ஒருத்தரில் ஒருத்தர் தங்கியிருக்கும் இன்றைய உலக ஒழுங்கை உடைத்து முப்படைகளையும் உருவாக்கியவன்.

பேரம் பேசும் வல்லமையை வளர்த்து சம தரப்பு அங்கீகாரத்துடன் உலக வல்லரசுகளையும் / அமைப்புக்களையும் தன் அலுவலக வாசல்வரை வரவழைத்தான்.

தலைவர் தமிழர் சேனைக்கு உத்தியோகப்பூர்வமாகப் பெயர் மாற்றி இன்றுடன் நாற்பத்தியெட்டு வருடங்கள்.
திரும்பிப் பார்க்கும்போது ஒரு கனவு போல் இருக்கிறது.
காற்சட்டையும் பாடசாலை சீருடையின் வெள்ளை மேற்சட்டையும் கூடவே அக்காவின் அரை மஞ்சாடி மோதிரத்துடன் மட்டும் வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சிறுவன் பின்னாடி தனது சொந்த மக்களின் பலத்தில் தனது நாட்டுத் திறைசேரியை நிரப்பினான். வல்லரசுகளே ஒருத்தரில் ஒருத்தர் தங்கியிருக்கும் இன்றைய உலக ஒழுங்கை உடைத்து முப்படைகளையும் உருவாக்கி பேரம் பேசும் வல்லமையை வளர்த்து சம தரப்பு அங்கீகாரத்துடன் உலக வல்லரசுகளையும் / அமைப்புக்களையும் தன் அலுவலக வாசல்வரை வரவழைத்தான்.
இந்த மேஜிக் எப்படி நடந்தது? இது வெளியாட்களுக்கு மேஜிக் ஆகத் தெரியலாம். ஆனால் பி ர பா க ரனியத்தை உட்செரித்தவர்களுக்குத் தெரியும், அவர் சொல்லுக்கு முன் செயலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தின் விளைச்சலே இந்த அறுவடை. அதிகம் பேசாமல் மவுனமாக இருப்பது போன்ற ஒரு வெளித் தோற்றம். ஆனால் மறுவளமாக அசுர வேகத்தில் ஒரு பாய்ச்சல். அதுதான் இந்த மேஜிக்கின் சூட்சுமம்.
கடைசிவரை செயலிலேயே இருந்ததால் நந்திக்கடலில் கூட அவர் தனது மவுனத்தை உடைக்கவில்லை. அது இந்த இனத்தின் இறுதி அறுவடைக்கான சொல்லுக்கு முன்னான 'செயல்'. அந்த விளைச்சலை எப்படி அறுவடை செய்வதென்று தெரியாமல் இந்த இனம் அதற்கு வேறு வகையான வியாக்கியானங்கள் கற்பித்துக் கொண்டு அடிபணிவு / சரணாகதி/ இணக்க அரசியலுக்குள் தம்மைப் புகுத்திக் கொண்டதுதான் பெரும் வரலாற்றுத் துயரம். ஆனால் அதையும் அவர் முன்னுணர்ந்ததால் அதற்கேற்பவே நந்திக்கடலில் தனது ஆட்டத்தை ஆடினார். அது தானாகவே எம்மை விடுதலையை நோக்கி நகர்த்தும். 'பி ர பா க ர ன் இன்று யோசிப்பதை அவரது எதிரிகள் புரிந்து கொள்ள பல பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்' அனிதா பிரதாப். இப்போது நமது முறை - நாமும் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
தமிழர் சேனையின் இன்றைய அகவை நாள் செய்தி இதுதான்.