Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

விகாரைகளுக்காக கபளீகரம் செய்யப்படும் தமிழர் நில பரப்பு: மண்மீட்பிற்காக அனைவரும் அணிதிரள வேண்டும்

.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் பூர்வீகமாக வாழ்ந்து விவசாயம் செய்த 41,000 ஏக்கர் காணிகளை வன இலாகா திணைக்களம் கையகப்படுத்தி உள்ளதாகவும், துறைமுக அதிகார சபையும் காணிகளை கையகப்படுத்த முனைவதாகவும் குச்சவெளியில் 31 விகாரைகள் கட்டுவதாகவும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை வரவேற்று, கௌரவிக்கும் நிகழ்வு மூதூர்-பட்டித்திடல் பிரதேசத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

உரிமைப் பிரச்சினை, அபிவிருத்தி பிரச்சினை இதில் உரிமை தான் முக்கியம் பாராளுநாடாளுமன்ற உறுப்பினராகி 7 வாரங்களில் ஐந்து கோடிக்கு மேல் இம்மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகளை செய்துள்ளேன்.

யாருக்கும் விலை போகாது அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறேன். நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்கின்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்துள்ளேன்

அபிவிருத்திகளை விடவும் உரிமைகளை பெறுவதே முக்கியமாக காணப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து விவசாயம் செய்த தமிழ் மக்களுடைய காணிகளை அடாத்தாக வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், துறைமுக அதிகார சபை என மொத்தமாக 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய காணிகளை கபளீகரம் செய்துள்ளனர்.

எல்லைநிர்ணய ஆணைக்குழு சில பகுதிகளை வேறு பகுதிகளுடன் சேர்த்துள்ளது. குச்சவெளியில் 31 விகாரைகள் கட்டுகின்றனர். இதற்காக 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் வழங்கப்பட்டுள்ளன இவ்வாறாக தனிநபர் காணிகளை பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதனை மீட்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.