Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அதிகளவில் மக்களை தமது மேதினக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து அதன்மூலம் தமது பலத்தை வெளிப்படுத்த கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.

பிரதான அரசியல் கட்சிகள் மே தினத்தில் பலத்தை காட்ட கடும் முயற்சி!

பிரதான அரசியல் கட்சிகள் மே தினத்தில் பலத்தை காட்ட கடும் முயற்சி!

தேர்தலுக்கான அறிவித்தல் நெருங்கும் நிலையில் எதிர்வரும் மேதினத்தில் தமது பலத்தை வெளிப்படுத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதிகளவில் மக்களை தமது மேதினக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து அதன்மூலம் தமது பலத்தை வெளிப்படுத்த கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயாதீனமாக இயங்கும் கட்சிகள் உள்ளிட்டவை கொழும்பில் தமது மேதினக் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

இதேவேளை இந்தக் கூட்டத்தின் போது தமது அரசியல் கூட்டணிகள் தொடர்பில் அறிவிப்பதற்குகும் சில கட்சிகள் எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

முடிந்தளவு மேதினக் கூட்டத்திற்கு மக்களை அழைத்து வர வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளன.

இதனால் இப்போதே மேதினக் கூட்டத்திற்கான பஸ்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கைகளை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.