Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அனுரவுக்கு ஆபத்து: தீவிரமாக பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

.

 

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பல்வேறு ஆபத்துக்கள் இருப்பதால் அவரது பாதுகாப்பை பலப்படுத்த அக்கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுக்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது.

இலங்கை முழுவதும் பல்வேறு துறைசார்ந்தர்கள் மற்றும் தொழிற்சங்க மாநாடுகளை தேசிய மக்கள் சக்தி கடந்த சில மாதங்களாகவே நடத்திவருகிறது.

கடுமையான பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென அக்கட்சியின் ஆதரவாளர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்துள்ளனர்.

அதன் பிரகாரம் தற்போது கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவம் மற்றும் பொலிஸ் பிரிவுகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அனுரவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

எதிர்காலத்தில் அனுரகுமார ஜனாதிபதித் தேர்தலுக்காக பங்குபற்றும் கூட்டங்களில் விசேட பாதுகாப்புகள் இருக்குமென தெரியவருகிறது. அத்துடன், அக்கட்சியின் முன்னிலை தலைவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.