Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலின் புதிய கூட்டணி: அடுத்தவாரம் வெளியாக உள்ள அறிவிப்பு

.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ரணில் விக்ரமசிங்க பல கட்சிகளின் கூட்டணியுடன் பொது வேட்பாளராக தேர்தலில் களமிறங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுளளார்.

பொதுஜன பெரமுனவில் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் பிரதி, இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்களும் ரணிலின் கூட்டணியில் இணைந்துகொள்ளும் உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சகத்தியிலிருந்து 15 முதல் 20 பேர்வரை ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ச்சல் சரத் பொன்சேகா உள்ளிட்டோரையும் தமது கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான குழுவும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் வகையில் பரந்தப்பட்ட கூட்டணியொன்றை உருவாக்கி வருகிறது.

இவ்வாறாக பின்புலத்தில் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் தமது கூட்டணியை வெளிப்படுத்தும் முயற்சிகளில் ரணில் விக்ரமசி்ங்க தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.