Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த சீன் இது தான்! பிரபல நடிகை பகிர்ந்த தகவல்!

அண்ணாமலை படத்தில் ரஜினிக்கும் குஷ்புவுக்கும் மகளாக நடித்த நடிகை தக்‌ஷியாகினி.

சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த சீன் இது தான்! பிரபல நடிகை பகிர்ந்த தகவல்!
ரஜினி கூட நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. அப்படி ஒரு ஆசையில் வந்தவர்தான் நடிகை தக்‌ஷியாகினி. இவர் வேறு யாருமில்லை. அண்ணாமலை படத்தில் ரஜினிக்கும் குஷ்புவுக்கும் மகளாக நடித்த நடிகைதான் இந்த தக்‌ஷியாகினி. ஈரமான ரோஜாவே படத்தின் மூலமாக அறிமுகமானார் தக்‌ஷியாகினி. அதற்கு முன் பாண்டியராஜ் மற்றும் பாக்யராஜிடம் வாய்ப்புக்காக அலைந்திருக்கிறார்.
அதன் பிறகே ஈரமான ரோஜாவே படத்தில் மோகினிக்கு தோழி கேரக்டரில் நடித்திருக்கிறார். அதன் பிறகு ஒரு சமயம் ஏவிஎம்மிலிருந்து ஸ்டூடியோவிற்கு வர வேண்டும் என தக்‌ஷியாகினிக்கு போன் வர ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் ரஜினி இருப்பார் என தக்‌ஷியாகினி ஆர்வமாக போயிருக்கிறார்.ஆனால் ரஜினி அப்பொழுது இல்லையாம். அதன் பிறகு ஒருவாரம் கழித்து வாகினி ஸ்டூடியோவிற்கு வர சொல்லியிருக்கிறார்கள். அங்கு ரஜினி நடித்துக் கொண்டிருந்தாராம். அவர்
ஷாட் முடிந்த பிறகு தக்‌ஷியாகினியை பார்த்ததும் ரஜினி தோளுடன் தழுவி அழைத்துக் கொண்டு போய் மனோரமாவிடம் இவர்தான் தக்‌ஷியாகினி. எனக்கு மகளாக நடிக்க போகிறார் என்று சொல்லியிருக்கிறார்.அதன் பிறகே இந்தப் படத்தில் நாம் இருந்திருக்கிறோம் என தக்‌ஷியாகினிக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. அதன்பிறகு அண்ணாமலை படத்தில் ஒரு சீன். கோபத்தில் மகளை அடிக்கிற மாதிரி சீன். அதை ரஜினியிடம் மட்டும்தான் சொன்னார்களாம். ஆனால் தக்‌ஷியாகினிக்கு டையலாக் மட்டும்தான் சொன்னார்களாம். டையலாக் பேசி முடித்த பிறகு ரஜினி தக்‌ஷியாகினியை அடித்தாராம். இது தக்‌ஷியாகினிக்கு ஒரே ஷாக்காம். ஷாட் முடிந்ததும் ரஜினி தக்‌ஷியாகினியிடம் ‘என்ன வலிக்குதா’ என கேட்டாராம். இருந்தாலும் படத்தில் எனக்கு 4, 5 சீன் என்றாலும் படமுழுக்க ரஜினி சார் கூட முழுக்க வாழ்ந்த மாதிரி ஒரு ஃபீல் இருந்தது என தக்‌ஷியாகினி கூறினார் ,
அதுமட்டுமில்லாமல் அண்ணாமலை படத்தின் 175 வது பட விழா கொண்டாடப்பட்டதாம். அந்த படத்தில் எவ்வளவோ நல்ல சீன்கள் இருக்கின்றன. ஆனால் அந்த விழா மேடையில் ரஜினி இந்தப் படத்தில் தனக்கு பிடித்த சீன் என் மகளை அடித்த சீன் தான் என்று கூறினார். அதுவே எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது என தக்‌ஷியாகினி கூறினார்.