Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மயிலத்தமடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: சஜித் வாக்குறுதி!

.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்திற்கு தமது அரசாங்கத்தினால் தீர்வு காணப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெற்றதையடுத்து நல்லாட்சி அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட உதா கம்மான வீடமைப்பு வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அதேபோல, பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த பகுதிகள் தற்போது பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது.

அவ்வாறு பாதுகாப்பு வலயமாகக் காணப்படும் விவசாயிகளின் காணிகள் மீண்டும் விவசாயத்துக்காக வழங்கப்படும்.

அத்துடன், யானை மனித மோதலை குறைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

10 இலட்சம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்படுவார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்திக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.