Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஒன்லைன் நிதி மோசடி: 137 இந்தியர்கள் கைது

.

 

பாரிய அளவிலான ஒன்லைன் நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவில் அங்கம் வகித்ததாகக் கூறப்படும் 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் நேற்று (27) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பில் 55 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 29 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டதோடு 55 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொச்சிக்கடையில், 53 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 31 மடிக்கணினிகள் மற்றும் 58 கையடக்கத் தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, மடிவெல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டு எட்டு மடிக்கணினிகள் மற்றும் 38 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், தலங்கம மற்றும் பத்தரமுல்லை பகுதியில் 16 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, எட்டு மடிக்கணினிகள் மற்றும் 38 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 137 இந்தியர்களிடம் இருந்து மொத்தம் 158 கையடக்கத் தொலைபேசிகள், 16 மடிக்கணினிகள் மற்றும் 60 டெஸ்க்டாப் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்துள்ளதாகவும், இந்த இடங்களில் வாடகைக்கு எடுக்கப்பட்ட குடியிருப்புகளில் இருந்துகொண்டு சட்டவிரோதமான முறையில் ஒன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.