Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

விஜயதாசவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகுமா?: பெரமுனவின் கையில் முடிவு

.

 

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுள்ளது.

அந்த கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் கொழும்பில் இன்று திங்கட்கிழமை (24.06.24) இடம்பெறவுள்ளது.

இதன்போது, அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜயதாச ராஜபக்ச ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்று நாடளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

பொதுஜன பெரமுன கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர் மற்றுமொரு அரசியல் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றால் தற்போதுள்ள கட்சி உறுப்புரிமையை விரைவில் இழக்க நேரிடும் என முன்னதாகவே பெரமுனவின் உறுப்பினர் கருத்து வெளியிட்டார்கள்.

விஜயதாச ராஜபக்ச பெரமுனவின் உறுப்பினராக இருந்துக் கொண்டு, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டதால் அவர் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி யாப்பை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டத்தில் விஜயதாசவின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டால், அவர் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்க நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.

விஜயதாச ராஜபக்சவிற்கு புதிய பதவியொன்று கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் மற்றுமொரு பதவியை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு நெருக்கடியை சந்தித்துள்ளார்.