Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ராஜபக்ச கட்சியா மாற்றுக் குழுவா: ரணிலின் தீர்மானம் எது?

.

 

இலங்கைத்தீவில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கு தயாராகும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பசில் ராஜபக்ச இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்காக முதலில் ரணில் மற்றும் பசில் ராஜபக்ச இடையில் மாத்திரம் கலந்துரையாடல் தீர்மானிக்கப்பட்டாலும் இதற்காக துமிந்த திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குழு மற்றும் மாற்றுக் குழுவில் சிலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

கலந்துரையாடலில், மொட்டுக்கட்சியுடன் எந்தவொரு விதத்திலும் கூட்டணி அமைக்கத் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் மாற்றுக் குழு ரணில் முன்னிலையில் பசில் ராஜபக்சவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச கூட ஜனாதிபதியுடன் பயணிக்கத் தயாரில்லை எனவும் ரணிலுடன் இருப்பது மொட்டுக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான ஒரு குழு எனக் கூறும் போதும் கூட நாமலின் எதிர்ப்பை ஒரு புறம் வைத்து விட்டு அரசாங்கத்திற்கு மற்றும் ஜனாதிபதிக்கு உதவி செய்யும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்கள் மூலம் மனஸ்தாபங்கள் மாத்திரமே உருவாவதாக பசில் ராஜபக்ச குறித்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட வஜிர அபேவர்தனவுக்கு தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் மொட்டுக் கட்சியா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்களா என ஜனாதிபதிக்கு தெரிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது என மாற்றுக் குழுவில் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.