Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

“லெபானானில் உள்ள ஐ.நா அமைதிப்படை வெளியேற்றப்பட வேண்டும்“: நெதன்யாகு கோரிக்கை

.

தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைகளை உடனடியாக வெளியேற்றுமாறு ஐ.நா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படையை சேர்ந்த ஐந்தாவது அமைதி காக்கும் வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெய்ர் பெல்லா, அல் மய்ஸ்ரா மற்றும் பர்ஜா ஆகிய இடங்களில் இஸ்ரேல் நேற்று நடத்திய மூன்று தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா லெபனானிலிருந்து இஸ்ரேலுக்கு சுமார் 320 ஏவுகணைகளை சனிக்கிழமை ஏவியது.

காசாவில், மத்திய மற்றும் வடக்கு காசா பகுதியில் சனிக்கிழமை மற்றும் ஒரே இரவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 29 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.