Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

கனடாவின் இறையாண்மையைக் காப்பாற்ற போராடுவோம்: ட்ரூடோவின் முன்னாள் கூட்டணிக்கட்சித் தலைவர்

.

கனடா விற்பனைக்கு அல்ல என்று கூறியுள்ள ட்ரூடோவின் முன்னாள் கூட்டணிக்கட்சித் தலைவரான ஜக்மீத் சிங், கனடாவின் இறையாண்மையைக் காப்பாற்ற போராடுவோம் என சூளுரைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், கனடாவை குறிவைத்து வார்த்தைத் தாக்குதல்கள் நடத்திவருகிறார்.

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடாவில் ஆளுநர் என்றும் கேலி செய்துவந்தார் ட்ரம்ப்.

கனடா விற்பனைக்கு அல்ல என்று கூறியுள்ள ட்ரூடோவின் முன்னாள் கூட்டணிக்கட்சித் தலைவரான ஜக்மீத் சிங், கனடாவின் இறையாண்மையைக் காப்பாற்ற போராடுவோம் என சூளுரைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், கனடாவை குறிவைத்து வார்த்தைத் தாக்குதல்கள் நடத்திவருகிறார்.

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடாவில் ஆளுநர் என்றும் கேலி செய்துவந்தார் ட்ரம்ப்.இந்நிலையில், ட்ரூடோவின் முன்னாள் கூட்டணிக்கட்சியான New Democratic Party (NDP) கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், டொனால்ட் ட்ரம்புக்கு நான் கூறும் செய்தி ஒன்று உள்ளது, கனடா விற்பனைக்கு அல்ல, இப்போதும் அல்ல, எப்போதுமே அல்ல, என்று கூறியுள்ளார்.

அத்துடன், கனடாவின் இறையாண்மையைக் காப்பாற்ற கடுமையாகப் போராட கனேடியர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் சிங்.

அமெரிக்காவின் காட்டுத்தீ பற்றி எரிகிறது, அதை அணைக்க கனேடிய தீயணப்பு வீரர்கள் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்கள்.

அதுதான் கனேடியர்களாகிய நாங்கள், அதாவது, பக்கத்து நாட்டுக்கு ஒரு ஆபத்து என்றால் உதவி செய்ய ஓடோடி வருவோம். ஆனால், அதற்காக எங்களுடன் சண்டைக்கு வரலாம் என ட்ரம்ப் நினைப்பாரானால், அதற்கு அவர் விலை கொடுக்கவேண்டியிருக்கும்.

ட்ரம்ப் கனேடிய பொருட்கள் மீது வரி விதிப்பாரானால், பழிக்குப் பழி நடவடிக்கையாக நாங்களும் வரி விதிப்போம். அடுத்து யார் கனடாவின் பிரதமராக வந்தாலும் அதைத்தான் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார் சிங்.