Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

திருமலை திருக்கோணேஸ்வரம் கோவிலுக்கு அருகில் “கோகுலம் மையம்” இந்து கற்றல் நிலையம்

.

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோவிலுக்கு அருகில் “கோகுலம் மையம்” இந்து கற்றல் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருகோணமலையில் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை (31) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கோனேஸ்வரம் என்ற பழமையான ஆலயம், தெற்கு கைலாசமாக இந்துக்களின் புனிதப் பராமரிப்பில் இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த ஆலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தாம் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள சிவில் பாதுகாப்புப் படையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுகத்தை எந்த அரசாங்கமும் அபிவிருத்தி செய்யவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, இந்திய அரசாங்கத்துடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

திருகோணமலையை அபிவிருத்தி செய்ய ஆர். சம்பந்தன் தொடர்ந்து தன்னிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, அப்போது அவருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாகத் தெரிவித்தார்.