Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

புதுச்சேரியில் பிரான்ஸ் துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

.

புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த ஊழியா்கள் வெளியேற்றப்பட்டு போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே உள்ள மரைன் வீதியில் பிரான்ஸ் துணைத் தூதரகம் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். தூதரக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெரியகடை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி கிழக்குப் பிரிவு எஸ்.பி. லட்சுமி சௌஜன்யா தலைமையில் ஏராளமான போலீஸாா் பிரான்ஸ் துணைத் தூதரக அலுவலகத்துக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, வெடிகுண்டு நிபுணா்கள், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினா், 2 போலீஸ் மோப்ப நாய்கள் மற்றும் தீயணைப்புத் துறையினா் உள்ளிட்டோா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

சுமாா் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புரளி என்பது தெரிய வந்தது.

ஜிப்மரை தொடா்ந்து மிரட்டல்: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

 

கோரிக்கை: வெடிகுண்டு கண்டறியும் சோதனைக்கான நவீன சாதனங்கள் புதுச்சேரியில் இல்லை என்றும், சோதனையில் ஈடுபடும் போலீஸாா் பாதுகாப்பு கவசமின்றியே பணிபுரியும் நிலையுள்ளது. எனவே, வெடிகுண்டு தடுப்புப் பிரிவுக்கு தேவையான உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே வீதியின் முகப்பில் கயிறு கட்டியும், கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதியிலிருந்து பிரான்ஸ் துணைத் தூதரக அலுவலகத்துக்கு வரும் அனைத்து வழிகளிலும் போலீஸாா் தடுப்புகள் ஏற்படுத்தி கண்காணித்தனா்.