Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மியான்மார் பூகம்பத்தின் பின் ஆங்சாங்சூகி எங்கே? மகன் வெளியிட்ட தகவல்!

ஆங்சாங்சூகி ஒரு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவி ஆங்சாங்சூகியின் பூகம்பத்தின் பின்னரான நிலை குறித்து எந்த தகவலும் இல்லை என அவரது மகன் கவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் ஆங்சாங்சூகி தடுத்துவைக்கப்பட்டுள்ள நே பிய்டாவ் சிறைச்சாலை பூகம்பத்தினால் பாதிக்கப்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவரின் மகன் கிம் அரிஸ், ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியாமலுள்ளது என தெரிவித்துள்ளார்.

 தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட ஆங்சாங்சூகி

பூகம்பத்திற்கு முன்னரே அவரை தொடர்புகொள்வது என்பது மிகவும்கடினமான விடயமாக காணப்பட்டது என தெரிவித்துள்ள ஆங்சாங்சூகியின் மகன் நான்கு வருடத்திற்கு ஒருமுறையே அவர்சிறையிலிருந்து கடிதம் எழுதுவதற்கு அனுமதித்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது சட்டத்தரணிகளாலும் அவரை தொடர்புகொள்ள முடியாது,அவர் ஒரு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றே நான் அறிகின்றேன் என ஆங்சாங்சூகியின் மகன் தெரிவித்தள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் நான் அவருடன் இருந்து பிரிக்கப்பட்டுள்ளேன் ஆனால் தற்போதைய நிலை வித்தியாசமானது அவர் சிறையில் இருக்கின்றார், எனவும் ஆங்சாங்சூகி மகன் தெரிவித்துள்ளார்