Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

கையாலாகாத்தனமும் குற்றவுணர்வும்.

.

கையாலாகாத்தனமும் குற்றவுணர்வும்.
 
இந்த கடும் வெயிலும் வெப்பமும் எங்களை பாதிக்கிறதை விட போரின் பரிசாக உடலிலும் தலையிலும் உலோகச் சிதறல்களை (shrapnels) சுமந்து திரிகின்றவர்கள் படும்பாடு சொல்லொணாதது.வெயில் ஏற ஏற உடலுக்குள் இருக்கும் உலோகம் சூடாகி அவர்களுக்கு மரணவலியை தருகின்றது என்கிறார்கள்.
மனித உடலுக்குள் புதைந்திருக்கின்ற உலோகம் புற வெப்பநிலைக்கு ஏற்ப வெப்பமாகுமா என்றெல்லாம் எனக்கு ஆராய்ந்து அறியமுடியவில்லை. ஆனால் இன்று, தங்கை ஒருத்தி தலைக்குள் கொதிக்கும் உலோகத்தோடு வெயிலில் பட்ட பாட்டை அருகில் இருந்து பார்த்த போது மீண்டும் மீண்டும் கையாலாகாத்தனமும் குற்றவுணர்வும்.