Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பொறுப்புக் கூறல் அவசியம்: ஐ.நா வலியுறுத்து.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பொறுப்புக் கூறல் அவசியம்: ஐ.நா வலியுறுத்து.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரே பிரான்சே (Marc-André Franche) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதற்கு முழுமையான வெளிப்படையான விசாரணைகள் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்ச்சியாக பொறுப்புக்கூறல் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றது, அது பொறுப்புக்கூறலிற்கான பொறுப்புக்கூறலாகயிருக்கலாம் அல்லது சமீபத்தைய மனித உரிமை மீறல்களிற்கான பொறுப்புக்கூறலாகயிருக்கலாம் என ஐ.நாவின் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

நாடு முன்னோக்கி நகரவேண்டுமென்றால் அதற்கு தீர்வை காணவேண்டும் எனவும், இலங்கையின் உயர்நீதிமன்ற தாக்குதலை தடுக்கதவறினார்கள் என முன்னாள் அதிபர் மற்றும் உயர் அதிகாரிகளிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக இன்னமும் காத்திருக்கின்றனர் என குறிப்பிட்டார்.

சவால்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளின் ஒருபகுதியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்படுதல் காணப்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.