Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்தித்தார்

.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்தித்தார்
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களை அண்மையில் (02) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
அண்மையில் கனடாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கனேடியப் பிரதமருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த சபாநாயகர், கனேடிய மக்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அத்துடன் கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆறு தசாப்தத்திற்கு மேலாகக் காணப்படும் உறவுகளையும் நினைவு கூர்ந்தார்.
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கனடா தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கும் சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார். மகாவலி போன்ற நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், கண்ணிவெடி அகற்றல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் இலங்கைக்கு கனடா வழங்கிய உதவிகளையும் சபாநாயகர் நினைவு கூர்ந்தார். பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைமைகளின்போதும், கடன் மறுசீரமைப்பின் போதும் கனடா வழங்கிய உதவிகளுக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.