Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலின் உறுதியான வார்த்தைக்காக காத்திருக்கும் கட்சி உறுப்பினர்கள்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணிலின் உறுதியான வார்த்தைக்காக காத்திருக்கும் கட்சி உறுப்பினர்கள்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் என உறுதியாக அறிவித்ததன் பின்னர் அவருக்கு ஆதரவு வழங்க அதிகளவிலான ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, உத்தர லங்கா சபாகய, சுதந்தர மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அமைச்சர்கள் சிலர் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் சிலர் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருந்தாலும் அவர்கள் கலந்துக்கொண்டிருக்கவில்லை, காரணம் ரணில் தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் என இன்னும் உறுதிபடுத்தாமையே என குறித்த உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ரணில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் என உறுதியாக அறிவித்ததன் பின்னர் ரணிலுக்கு ஆதரவு வழங்க எதிர்க்கட்சியின் அமைச்சர்கள் சிலர் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளரை உறுதியாக தெரிவிக்கவில்லை என்பதால் சிலர் தற்போது ஆதரவு தெரிவிக்க தயங்கி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்தார்.

ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கயாஷான் நவநந்தன அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணியில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கலந்துக் கொண்டிருந்தார்.

அதன்படி, எதிர்வரும் காலத்தில் எதிர்க்கட்சியின் ஏனைய சில உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்க இணைவார்கள் என நிமல் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.