Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரிட்டனில் பரபரப்பு மிகுந்த தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார்.

கொளத்தூர் ஆனந்த் குமார் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்!

பிரிட்டனில் வரும் ஜூலை 4 ஆம் திகதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பிரிட்டனில் தற்போதை பிரதமராக ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். அங்கு வரும் ஜூலை 4 ஆம் திகதி பிரதமர் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரிட்டனில் மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. அதில் எந்த கட்சி 326 இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெறும்.

எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு பாராளுமன்ற நடைமுறை பின்பற்றப்படும். அதன்படி, பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்கலாம்.

ஒருவேளை பிரதமர் பதவியில் இருப்பவரால் கூட்டணி கட்சிகளுடன் பேசி ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால், தேர்தல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும்.

இத்தகைய பரபரப்பு மிகுந்த தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். சென்னை கொளத்தூரை  பூர்வீகமாக கொண்டவர் ஆனந்த் குமார். பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.