Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தற்கொலை குண்டுகளை ஏந்திக்கொண்டே ரணிலுடன் இணைந்தோம்

.

தற்கொலை குண்டுகளை ஏந்திக்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தானும் மனுஷவும் களத்தில் இறங்கியதாக உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

”எமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என அறிந்துக்கொண்டே இந்த பணியில் இறங்கினோம். எமது பதவிகளுக்கு அப்பால் நாட்டின் நலனும் நாட்டின் முன் இருந்த சவால்களுமே எமக்கு முதன்மையாக இருந்தன.

ஜனாதிபதியைப் போன்று தானும் மனுஷ நாணயக்காரவும் இன்று முதல் சுதந்திரமாக செயற்படுவோம் என்பதுடன், புதிய அரசியல் பயணமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம்.

தற்கொலை குண்டுகளை ஏந்திக்கொண்டே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக களமிறங்கினோம். ஆனால், இன்று நாட்டையும் காப்பாற்றியுள்ளோம். எம்மையும் காப்பாற்றியுள்ளோம்.

ஜனாதிபதியின் வெற்றிப்பாக பணியாற்ற அதிக காலம் கிடைத்துள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.