Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பலத்த பாதுகாப்பு !

.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) ஒருவரை நியமித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) தேசபந்து தென்னகோன் நேற்று ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கும் , முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடியதாக பொலிஸ் மா அதிபர்தெரிவித்துள்ளார். .

வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்கள் அல்லது வேட்புமனுக்கள் தொடர்பான தகுந்த ஆவணங்களை தேசிய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிறகு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும், என்றார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை சமர்ப்பித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார பேரணியின் போது முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியைத் தொடர்ந்து.
வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதற்கான குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.