Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள், மோசடிகள்: விசேட குழுவை நியமிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை

.

சுகாதார அமைச்சிற்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்ய உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (SRTSL) தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பிலான தகவல்களை மேற்படி குழுவிற்கு வழங்க தயாராக உள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம கூறியுள்ளார்.

”தற்போதைய பிரதமர் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். அதனால் அவரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

கடந்த காலங்களில் அதிக அளவில் ஊழல், மோசடிகள் அமைச்சுக்குள் இடம்பெற்றுள்ளன. புதிய ஜனாதிபதியும், சுகாதார அமைச்சராக கடமையாற்றும் பிரதமரும் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய ஜனாதிபதியும் சுகாதார அமைச்சரும் விசாரணை நடத்த குழுவொன்றை நியமிப்பதற்கு உடனடியாக செயற்படுவார்கள் என நம்புகின்றோம். நியமிக்கப்படும் குழு கடந்த காலத்தில் இருந்தவை போன்று இருக்கக் கூடாது. அது சுயாதீன குழுவாக இருக்க வேண்டும்.

சுகாதாரப் பாதுகாப்பு தொழிற்சங்கத் தலைவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் தாம் அறிந்த மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும்.” என்றும் சானக தர்மவிக்ரம வலியுறுத்தியுள்ளார்.